பதிவு செய்த நாள்
24
மே
2013
11:05
நகரி: நகரி கரிய மாணிக்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வெகு விமரிசையாக நடந்தது.சித்தூர் மாவட்டம், நகரி நகரில், கரிய மாணிக்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. "கஜேந்திர மோட்சம் என, ஸ்தல புராணம் கூறும், இக்கோவில், 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலின் விமான கோபுரம், உற்சவ மண்டபம், பரிவார தேவதைகளின் சன்னிதிகள், பாழடைந்து, இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளாக, புராணகால வரலாறு படி, அதே இடத்தில், ஐதீக முறைப்படி, புதியதாக கோவில் பணிகள் நடந்து வந்தன. மூன்று நிலை முகப்பு கோபுரம் அமைந்துள்ள இக்கோவிலின், புதிய கட்டட அமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால், கோவிலின் கும்பாபிஷேகம், வெகு சிறப்பாக நடந்தது. மேலும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான கரிய மாணிக்க பெருமாள் மூலவரின் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்பட்டன. கொடி மரம் ஸ்தாபிக்கப்பட்டு, கொடியேற்ற வைபவம் நடந்தது. பகல், 11:45 மணிக்கு விமான கோபுரம், மூலவர் சன்னிதி, லட்சுமி பெருந்தேவி தாயார் சன்னிதி, ஆண்டாள் தாயார் சன்னிதி ஆகிய சன்னிதிகளில், மகா கும்பாபிஷேக புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.