பதிவு செய்த நாள்
24
மே
2013
11:05
ஓசூர்: ஓசூர் பிரம்ம மலையில், பவுர்ணமியான நாளை (மே 25) மும்மூர்த்திகள் கிரிவலம் நடக்கிறது. தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில், ஓசூர் நகரில் விஷ்ணுமலை, சிவன் மலை மற்றும் பிரம்ம மலை ஆகியவை ஒரே நேர்கோட்டில் உள்ளது. இவற்றில் சிவன் மற்றும் விஷ்ணு மலைகளில் பழங்காலத்தில் கோவில்கள் அமைத்து விஷ்ணு, சிவனை பக்தர்கள் வழிப்பாட்டுள்ளனர். பிரம்ம மலையில் ஒரு மண்டபம் மட்டும் காணப்பட்டது. தற்போது, தன்னார்வ அமைப்பு மூலம், சிவன், விஷ்ணு மலையைபோல், பிரம்ம மலையிலும் பிரம்மனுக்கு கோவில் கட்டி விக்ரஹம் அமைத்து வழிப்பாடுகள் நடக்கிறது. இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மும் மூர்த்திகள் கிரிவலம் நடக்கிறது. மேலும், அன்று பிரம்ம மலையில் தீபம் ஏற்றி சிறப்பு வழிப்பாடுகள் நடத்தப்படுகிறது. நாளை பவுர்ணமியன்று மும்மூர்த்திகள் கிரிவலம் நடக்கிறது. ராயக்கோட்டை சாலை, பண்ட ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மாலை, 2.30 மணிக்கு மூம்மூர்த்திகள் கிரிவலம் புறப்படுகிறது. இந்த கிரிவலம் மூன்று கோவில் பகுதிகளுக்கும் சென்று மூம்மூர்த்திகளை தரிசித்துவிட்டு, மீண்டும் புறப்பட்ட பண்ட ஆஞ்சநேயர் கோவிலில் முடிவடைகிறது.