பதிவு செய்த நாள்
28
மே
2013
11:05
ஆறுமுகநேரி: சேர்ந்தபூமங்கலம் நவகயிலாயம் கைலாசநாதர் கோயிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.பாரத திருமுருகன் திருச்சபைசார்பில் நடந்த பூஜையை மாநில தலைவர் மோகனசுந்தரம் துவக்கி வைத்தார். திருச்செந்தூர் வட்டார ஆலோசகர் அம்மமுத்து ஓதுவார் முன்னிலை வகித்தார்.வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் கைலாசநாதர் சவுந்தர்ய நாயகி, நந்தியெம்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. சொக்கநாதர் மீனாட்சி அம்மன், சைவகுரவர்கள், 63 நாயன்மார்கள், அகத்தியர், சப்த கன்னியர், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பவுர்ணமி திருவிளக்குபூஜையை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆலோசகர் கூட்டாம்புளி சீனிவாசகம், மாவட்ட செயலாளர் சண்முகநாதன்,ஜெயகனி, சண்முகசுந்தரி, சபை நிர்வாகிகள் பரமசிவன், நாராயணன், முருகன், பன்னீர் செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.