சிங்கம்புணரி: மு.சூரக்குடியில் செகுட்டைய்யனார் கோயில் வைகாசி புரவி எடுப்பு விழா நடந்தது. வண்ணம் தீட்டிய புரவிகள் சூளை பொட்டலிலிருந்து கச்சேரி திடலுக்கு கொண்டு வரப்பட்டன. மறுநாள் மாலை சாமியாட்டத்துடன் அரண்மனை புரவி முன் செல்ல, நேர்த்திக்கடன் புரவிகள் எஸ்.கோயில்பட்டி செகுட்டைய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. சிறை மீட்டி ஐயனார் கோயிலுக்கு ஒரு அரண்மனை புரவியும் துணை புரவிகளும், சென்றன.