Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதலாம் குலோத்துங்க சோழன் கால ... ஆலங்குடி குருபகவான் கோயிலில் பக்தர்களுக்கு மிரட்டல்! ஆலங்குடி குருபகவான் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பியன்மாதேவியில் சிதிலமடைந்துள்ள சோழர் கால கோவில்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2013
10:06

நாகப்பட்டினம்: சோழப் பேரரசியரால் கட்டப்பட்ட கோவில், பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. நாகையில் இருந்து, திருக்குவளை செல்லும் வழியில், செம்பியன்மாதேவி கிராமம் உள்ளது. தஞ்சையை ஆட்சி செய்த, கண்டராதித்த சோழனின் பட்டத்தரசி, செம்பியன்மாதேவியால் இந்த ஊர் நிர்மாணிக்கப்பட்டதால், அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இக்கிராமத்தில், சோழப் பேரரசி செம்பியன் மாதேவியால், அழகிய அம்பிகை பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் கட்டப்பட்டது. கிராமத்தை நிர்மாணித்து, கோவிலையும் கட்டிய செம்பியன் மாதேவி, கோவில் பராமரிப்புக்காக, விவசாய நிலங்கள், கட்டடங்கள், நகைகளை தானமாக அளித்தார். கி.பி., 981ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கோவில், தற்போது அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 1959ம் ஆண்டு, மே 13 ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலப் போக்கில், கோவில் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்ததால், வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்தது. சில ஆண்டுகளுக்கு முன், கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, அரசு, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. இதையடுத்து, பணிகள் வேகமாகத் துவங்கியது; துவங்கிய வேகத்தில், நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது, கோவில் பராமரிப்பின்றி, சிதிலமடைந்து வருகிறது. பொக்கிஷமாகப் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய, வரலாற்றுச் சின்னமான சோழர் கால கோவிலை, சீரமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar