பதிவு செய்த நாள்
07
ஜூன்
2013
10:06
காஞ்சிபுரம்: வைகுண்ட பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த, வைகுந்தவல்லி உடனுறை வைகுண்ட பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு, கருடசேவை உற்சவமும், இரவு, அனுமந்த வாகன உற்சவமும் நடந்தது. நேற்று காலை, சேஷ வாகனமும், இரவு, சந்திரபிரபை உற்சவமும், இன்று காலை, மோகினி அவதாரமும், இரவு, யாளி வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.