கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதி, நாட்டு நலன், தோஷ நிவர்த்தி வேண்டி ஆனி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, சிறப்பு நிகும்பலா யாகம் நடந்தது. பத்ரகாளியம்மன் மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். இக்கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சாமிகளுக்கும் மகா தீபாராதனை மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பத்ர காளியம்மன் கவசங்கள் பாடி, யாகத்தீ வளர்த்து அதில் மிளகாய் வற்றலை கொட்டினர்.