கன்னிவாடி: அமாவாசையை முன்னிட்டு, தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு, பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.