கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சின்னமட்டராப்பள்ளி, ராஜி மலை கோவிந்தராஜிலு சாமி மலைக்கோவில் திருப்படிகள் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை, 6 மணிக்கு கணபதி பூஜை. லட்சுமி நாராயண பூஜை, சுதர்சன பூஜைகள் நடந்தது. காலை, 11 மணிக்கு மலைபாதை திருப்படிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. 12 மணிக்கு கோவிந்தராஜிலு சாமிக்கு மேல்விளக்கு பூஜை நடந்தது. மதியம், 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சின்னமட்டார பள்ளி சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.