Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியாழ்வார் சுவாதி திருவிழா ... இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி! இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆடம்பர தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி ரோப்காரில் பழுதான பாகம்: ஆய்வு செய்ய பேராசிரியர் குழு முடிவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2013
10:06

பழநி: பழநி கோயில் ரோப்கார் மேல்தளத்தின் பழுது குறித்து, கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி பேராசிரியர் குழு, உடைந்த கியர் ஷாப்ட் பாகத்தை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் 5ல் பழநி ரோப்கார் மேல்தள சக்கரத்தின் உள்ளே "கியர் ஷாப்ட் பழுது காரணமாக 250 அடி உயரத்தில் 8 பெட்டிகள் தொங்கின. 24 பக்தர்கள், டோலி மூலம் கயிறு கட்டி மீட்கப்பட்டனர். பழுதாகியுள்ள "கியர் ஷாப்ட் கழற்றும் பணியில், கோல்கட்டா ரோப்வே ரிசர்ச் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொங்கும் பெட்டிகள் கீழே விழாமல் இருப்பதற்காக, இரும்புவடக்கயிற்றில் "சேப்டி லாக்கள் பொறுத்தப்பட்டு, சக்கரத்தின் உதிரி பாகங்களை கழற்றும் பணி நடந்து வருகிறது. ரோப்கார் பெட்டிகள் அந்தரத்தில் இன்னமும் தொங்கிகொண்டுள்ளன. பேராசிரியர் குழு ஆய்வு: சேதமடைந்த கியர் ஷாப்ட் வெல்டிங் செய்து, ரோப்காரை இயங்கச்செய்து, ஒவ்வொரு அடியாக பெட்டிகளை நகர்த்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஷாப்ட் மிகவும் சேதமடைந்துள்ளதால், இயங்கிய சில நிமிடங்களில் மீண்டும் "கட் ஆகிறது. இதனை ஆய்வு செய்ய கோல்கட்டா நிறுவனத்தின் மூலம் அனுப்பப்பட்ட, கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மெட்டாலஜி, மெக்கானிக்கல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் பாலுசாமி, கிரிராஜ், கோபாலகிருஷ்ணன் பழநி வந்தனர். பழுதான ஷாப்ட் பாகத்தின் அமைப்பு முறை மற்றும், ரோப்கார் இயங்கும் விதம், தொழில் நுட்பம் குறித்து கேட்டறிந்தனர்.

அக்குழுவினர் கூறுகையில், ""ரோப்காரில் பழுதான ஷாப்ட் பாகங்களை ஆய்வு செய்ய உள்ளோம். எந்தவகையான மெக்கானிசம் உள்ளது. திடீரென பழுதாக காரணம் என்ன என ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பின் எங்களது அறிக்கை கோல்கட்டா நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்படும், என்றனர். ரோப்கார் விபத்து குறித்து, கோல்கட்டா நிறுவனம், ஆய்வுபணியை நடத்தி வரும் நிலையில், இந்து அறநிலையத்துறை சார்பில் எவ்வித பணியும் இதுவரை துவங்கவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் துவங்கி நவ., 7ல் சூரசம்ஹாரம், நவ., 8 திருக்கல்யாண உற்சவம் நடைபெற ... மேலும்
 
temple news
கோவை, மருதமலை சுப்ரமணியர் சுவாமி கோவில் மற்றும் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி காந்திமதி அம்மன் இன்று காலை பச்சை ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ 2.99 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar