கம்மாபுரம்: இருப்புக்குறிச்சி இருதய ஆண்டவர் ஆலயத்தில், ஆடம்பர தேர் பவனி நடந்தது. கம்மாபுரம் அடுத்த இருப்புக்குறிச்சி இருதய ஆண்டவர் ஆலயத்தில், ஆண்டு பெருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை 6:30 மணிக்கு திருப்பலி, மாலை 6:30 மணிக்கு தேர் பவனி, மறையுறை, திவ்ய நற்கருணை ஆசீர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆடம்பர தேர் பவனியையொட்டி, காலை 8:00 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டுப்பாடல், திருப்பலி நடந்தது. இரவு 10:00 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரித்த ஆடம்பர தேர் பவனி நிகழ்ச்சி நடந்தது.