பதிவு செய்த நாள்
11
ஜூன்
2013
10:06
காஞ்சிபுரம்: வைகுண்ட பெருமாள் கோவில் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதால், சீரழிந்து வருகிறது. காஞ்சிபுரத்தில், பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அறநிலையத்துறை சார்பில், பூஜைகள் நடத்தப்படுகின்றன. இங்கு, வைகுண்ட ஏகாதசி தினத்தில், ஏராளமான பக்தர்கள், சொர்க்க வாசல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பெருமாளை வழிபடுகின்றனர். கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள, 30 சென்ட் இடத்தில், அலங்கார பூச்செடிகள் மற்றும் புல்தரை அமைக்கப்பட்டுள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததால், பூச்செடிகளும், புற்களும் கருகிவிட்டன. தற்போது இந்த இடத்தில், அருகில் வசிக்கும் வாலிபர்கள், கிரிக்கெட் விளையாடுவதால், புற்தரைகள் பாழாகின்றன. இதுகுறித்து, பக்தர்கள் சிலர் கூறுகையில், "பூங்காவை பாதுகாக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.