பதிவு செய்த நாள்
11
ஜூன்
2013
10:06
காங்கயம்: காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 3.25 ஏக்கர் பரப்பளவில் தெப்பக்குளம் மற்றும் நந்தவனம் உள்ளது. இது, 50 ஆண்டுகளுக்கு முன், முறைகேடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தனியாரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள், அந்நிலத்தை மீட்க 10 ஆண்டுகளாக போராடினர். இறுதியாக, பேச்சுவார்த்தை அடிப்படையில், கடந்த மாதம் 21ம் தேதி, நிலம் மீட்கப்பட்டது. இந்நிலத்தை கோவில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தர, தாராபுரம் ஆர்.டி.ஓ.,விடம் அறநிலையத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. குளத்தை தூர்வாரி, 40 லட்சம் ரூபாயில் புதுப்பிக்க திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டா மாறுதல் செய்யப்படாததால், அப்பணி தாமதமாகி வருகிறது.அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மீண்டும் கோவில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தருமாறு, ஆர்.டி.ஓ.,விடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் உத்தரவு கிடைத்ததும், கோவில் குளம் மற்றும் நந்தவனம் புதுப்பிக்கப்படும், என்றனர்.