புதுச்சேரி: பாக்கமுடையான்பட்டு முத்துவாழி மாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழாவிற்கான பூஜை கடந்த 7ம் தேதி துவங்கியது. இன்று (11ம் தேதி) காலை 8:30 மணிக்கு 2ம் கால யாக பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை (12ம் தேதி) காலை 7:00 மணிக்கு நான்காம் கால பூஜை, கலச புறப்பாடும் நடக்கிறது. 10.30 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் கோவில் விமா னங்களுக்கும், 10.45 மணிக்கு பாகை விநாயகர், பாலமுருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், காலை 11.15 மணிக்கு முத்துவாழி மாரியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.