காமாட்சி அம்மன் சாத்தாவுராயன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2013 10:06
தேனி: தேனி நகர 24 மனை தெலுங்குச் செட்டியார்களுக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீகாமாட்சி அம்மன் ஸ்ரீசாத்தாவுராயன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (ஜூன் 12) நடக்கிறது. தேனி அல்லிநகரத்திலிருந்து, வீரப்ப அய்யனார் மலைக் கோவிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் ஜூன் 7 ல் இருந்து யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது.இன்று (ஜூன் 11) காலை இரண்டம் கால யாகபூஜையும், மாலை மூன்றம் கால யாகபூஜையும் நடைபெறும். நாளை (ஜூன் 12) காலை 7.20 மணிக்கு நான்காம் காலபூஜையும், காலை 10.15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறும். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். கும்பாபிஷேகத்தை திருப்பரங்குன்றம் ராஜாபட்டர் குழு நடத்துகிறார்கள்.ஆலய நிர்மாணத்தை கார்த்திகேயன் ஸ்தபதி, சிற்பக்கலை காஞ்சிபுரம் ராமகிருஷ்ணன், பொறியாளர் பாண்டியன் செய்துள்ளனர். விழா ஏற்பாடுகளை 24மனை தெலுங்குச்செட்டியார் மகாஜன சங்கத்தலைவர் சக்திவேல், செயலாளர் தயாளன், பொருளாளர் ஜெயராம்பாண்டி, ஜெயபிரகாஷ், காமட்சி அம்மன் அறக்கட்டளை தலைவர் ராஜசேகரன்,செயலாளர் கந்தபாண்டி, பொருளாளர் சக்திவேல் தலைமையிலான குழு செய்துவருகின்றனர்.