ராசிபுரம்: ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், மூன்றாம் ஆண்டு நமிநந்தி அடிகள், தெய்வச் சேக்கிழார் குருபூஜை மற்றும் நமிநந்தி அடிகள் தீப பேரொளி திருவிழா நாளை (ஜூன் 12) நடக்கிறது. நாளை காலை, 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. காலை, 9 மணிக்கு மேல் ஐம்பெறும் மூர்த்தி மற்றும் 63, நாயன்மார்களுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து பேரொளி வழிபாடு நடக்கிறது. காலை, 10 மணிக்கு பெரியபுராண தொடர் சொற்பொழிவு நடக்கிறது. பின், சிவாச்சாரியார்கள் உமாபதி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஸ்வாமிக்கு பெரும் திருமஞ்சன வழிபாடு நடத்துகின்றனர். பின், ஸ்வாமி சன்னதியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மாலை, 6 மணிக்கு மேல் அம்மையப்பர், நமிநந்தி அடிகள், தெய்வச் சேக்கிழார் ஸ்வாமிகள் கயிலாய வாத்தியம் முழங்க அடியார் திருவீதி உலா நடக்கிறது.