ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு 2007 திருவிளக்கு பூஜை நடந்தது.தொடர்ந்து விழா நாளை (12ம் தேதி)வரை நடைபெறுகிறது. ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை மாரியம்மன் கோயில் கொடை விழா சனிக்கிழமை சிறப்பு பூஜையுடன் துவங்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிறுமிகள் பங்கு பெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி, மாலை 7 மணிக்கு 2007 திருவிளக்கு பூஜை வழிபாடு, தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. 3ம்நாளான நேற்று(10ம்தேதி) இரவு 8 மணிக்கு மாக்காப்பு பூஜை நடந்தது. 4-ம் நாளான இன்று (11ம்தேதி) காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்தல், தீச்சட்டி நேமிதம்,10 மணிக்கு கண்மலர், பட்டு நேமிதம், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், உச்சிகால பூஜை, அன்னதானம் நடக்கிறது. பகல் 3 மணிக்கு சின்ன சப்பர ஊர்வலம், இரவு 9 மணிக்கு ஆயிரம் கண் பானை, மாவிளக்கு நேமிதத்தை தொடர்ந்து இரவு 12 மணிக்கு சாம பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு பெரிய சப்பரம் ஊர்வலம், வாணவேடிக்கை நடக்கிறது. விழா கடைசி நாளான நாளை(12ம் தேதி) காலை 9 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மதியம் 11 மணிக்கு பொங்கலிடுதல் வைபவம் தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.