உளுந்தூர்பேட்டை: சிறுபாக்கத்தில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஞான கணபதி, ஞானபுரீஸ்வரர் சமேத சிவப்பிரியாம்பிகை மற்றும் தட்சணாமூர்த்தி சுவாமி கோவில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், புண்யாக வாகனம், வாஸ்து ஹோமம் நடந்தது. இன்று(11ம் தேதி) மாலை 6 மணிக்கு மேல் கணபதி உப நிஷது ருத்ர சமக பாராயணம், ருத்ர சுதி, மஹா கணபதி சகஸ்நாம அர்ச்சனை, தீபாராதனை நடக்கிறது. 12ம் தேதி காலை 6 மணிக்கு துர்க்கா, சுக்த ஹோமங்கள், சிவசங்கல்ப பாராயணம், காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9 மணிக்குமேல் மகா கோபுர கலசாபிஷேகம் நடக்கிறது.10.30 மணிக்கு மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.