Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேடியப்ப ஸ்வாமி கோவில் ... புனித அந்தோனியர் ஆலயத்தில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டப கோலம் பூண்ட கோவில்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2013
10:06

ஈரோடு: வைகாசி மாத முகூர்த்த நிறைவு, வளர்பிறை தினத்தால், ஈரோடு மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள பல்வேறு கோவில்களில், 500க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. தமிழகத்தில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், குறைந்த செலவில், அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் திருமணம் செய்து கொள்ள அரசு அனுமதித்தது. மேலும், கோவில்களில் நடக்கும் திருமணத்தை, ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும், அறநிலையத்துறைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் விசேஷ தினங்கள், முகூர்த்த தினங்களின் போது, ஆயிரத்துக்கும் திருமணங்கள் நடந்து வருகிறது. நேற்று வைகாசி மாத முகூர்த்த நிறைவு மற்றும் வளர்பிறை தினம் என்பதால், ஏராளமானோர் திருமணம் செய்து கொள்ள முன்பதிவு செய்திருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் மட்டும் நேற்று, 500க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. இதுகுறித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் வில்வமூர்த்தி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி மாரியம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் ஆகியவற்றில், அதிகளவில் திருமண நிகழ்ச்சிகள் பதிவாகிறது. நேற்று வைகாசி மாத நிறைவு வளர்பிறை தினம் என்பதால், பண்ணாரியில், 20, பவானி சங்கமேஸ்வரர் கோவில், 55, ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில், 22 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இவையாவும், முறைப்படி பதிவு செய்து, 300 ரூபாய் பணம் செலுத்தி, நடந்த திருமணம் ஆகும். இவர்கள் அனைவருக்கும், சில தினத்தில், திருமணம் செய்து கொண்டதற்கான ரிஜிஸ்டர் அலுவலக திருமண பதிவுகள் கிடைக்கும். பவானி சங்கமேஸ்வரர் கோவில் இரட்டை விநாயகர் கோவில் முன், 150க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளது. இதேபோல், பண்ணாரி மாரியம்மன், கோட்டை ஈஸ்வரன் கோவில்களிலும், பதிவு செய்யாத திருமணங்கள் நடந்துள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar