நடுவீரப்பட்டு: பாலூர் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி கடந்த 10ம் தேதி பொன்னியம்மன் கோவிலிலிருந்து ஊரணி பொங்கல் வைத்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 11ம் தேதி விநாயகர், திரவுபதி அம்மன், அர்ச்சுனன், கிருஷ்ணன், பொன்னியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து மதியம் 3:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. 12ம் தேதி அர்ச்சுனன் மற்றும் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று 14ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து மாலை 5:30 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான வர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.