பதிவு செய்த நாள்
15
ஜூன்
2013
10:06
பழநி: பழநி கோயிலில், தேவஸ்தான அனுமதிபெற்ற "கைடு கள் இல்லை, என, இணை கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார். பழநி கோயிலுக்கு, சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை பஸ் ஸ்டாண்ட், அடிவாரம் பகுதிகளிலேயே வழி மறிக்கும் "போலி கைடு கள், "சிறப்பு தரிசனம், அறை வசதி ஏற்பாடு எனக்கூறி, 500 முதல் 1000 ரூபாய் வரை, வசூலிக்கின்றனர். பாதவிநாயகர் கோயிலில் துவங்கும், இவர்களின் ஏமாற்றுவேலை, மலைக்கோயில் வரை தொடர்கிறது. இதுகுறித்து, கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில்,""மதுரை மீனாட்சியம்மன் கோயில் போல, தேவஸ்தானம் அனுமதி பெற்ற "கைடு கள், பழநியில் இல்லை. "போலி நபர்களிடம், பக்தர்கள் ஏமாற வேண்டாம் என, ஒலிபெருக்கி மூலம், தொடர்ந்து எச்சரிக்கிறோம். மொழி தெரியாத பக்தர்கள், "போலி கைடு களிடம் சிக்கி கொள்கின்றனர். இதுகுறித்து தேவஸ்தானத்தில் புகார் கூறினால், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.