Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதண்டராமர் கோயிலில் விபீஷணருக்கு ... இன்று திருவாழியாழ்வான் திருநட்சத்திரம்! இன்று திருவாழியாழ்வான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜலகண்டேஸ்வரர் கோபுரத்துக்குள் பூஜை: புதையல் ஆசையில் கற்கள் தோண்டி எடுப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2013
10:06

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியிலுள்ள, ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரத்தின் உள்பகுதியில் மர்மநபர்கள் புதையல் இருக்க கூடும் என்ற எண்ணத்தில் இரவில் பூஜை நடத்தி கற்களை தோண்டி சேதப்படுத்தியுள்ளனர். மேட்டூர் அணை, 152 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்டது. 2003ல் அணை நீர்மட்டம், 25 அடிக்கும் கீழே சரிந்தபோது, நீர்பரப்பு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் முழுமையாக வெளியில் தெரிந்தது. அதன் பின் நீர்மட்டம், 50 அடிக்கு மேல் நீடித்ததால், பத்து ஆண்டாக கோபுரம் வெளியில் தெரியவில்லை. நடப்பாண்டு ஏற்பட்ட வறட்சியால் மேட்டூர் அணை நீரில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் முழுமையாக வெளியில் தெரிகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜலகண்டேஸ்வரர் கோபுரம், அருகிலுள்ள நந்தியை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு திரும்புகின்றனர். இந்நிலையில், கோபுரத்தின் உள்பகுதியில் புதையல் இருக்க கூடும் என்ற சந்தேகம் சிலர் மர்மநபர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரம் மர்மநபர்கள் கோபுரத்தின் உள்பகுதியில் புகுந்து பூஜை நடத்தி கற்களை பெயர்த்து, புதையல் தேடியுள்ளதாக தெரிகிறது. கோபுரத்தின் உள்பகுதியில் பூஜை நடத்தியதற்கு அடையாளமாக அப்பகுதியில் குங்குமம், பூஜை பொருட்கள் சிதறி கிடக்கிறது. கற்களும் உடைத்து பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மர்மநபர்கள் கோபுரத்தின் உள்பகுதி கற்களை பெயர்த்து, புதையல் தேடிய சம்பவம் அணை கரையோர கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருவது மிக சிறந்ததாக ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar