Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கோவிந்தவாடி அகரம் கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிடந்தை கோவிலில் வாகன நிறுத்துமிடம் அவசியம் பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2013
11:06

மாமல்லபுரம்: திருவிடந்தை கோவிலுக்கு வரும், பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதி இன்றி, சாலையிலேயே ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை, விரைந்து செயல்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை கிராமத்தில், புகழ்பெற்ற நித்யகல்யாண பெருமாள் கோவில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருமண தடை உட்பட பல்வேறு தோஷங்களுக்கு முக்கிய பரிகார தலமாகவும், 108 வைணவ திருத்தலங்களில், 62வது தலமாகவும் புகழ்பெற்றது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தோஷ பரிகாரங்களுக்காக, ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

நெரிசல்: குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, வார இறுதி நாட்களில், ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர். இதனால், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், பக்தர்கள் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், இங்கு வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாததால், கோவில் அருகில், சாலையோர குறுகிய பகுதியில், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால், கோவில் அருகில் கடும் நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, கோவிலின் பின்புறம், கோவிலுக்கு சொந்தமான, ஒரு ஏக்கர் நிலத்தில், வாகன நிறுத்துமிடம் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன், நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அங்கு வாகனங்களை நிறுத்தினால், கோவில் முன்புற கடைகளில் வியாபாரம் பாதிக்கலாம் என, கருதிய உள்ளூர் வியாபாரிகள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், பக்தர்கள் அவதி தொடர்கிறது. எனவே, கோவில் நிர்வாகம், பக்தர்களின் நலன் கருதி, வாகன நிறுத்துமிட பிரச்னைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar