பதிவு செய்த நாள்
19
ஜூன்
2013
11:06
காஞ்சிபுரம்: வரதராஜப் பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் மாலை கோடை உற்சவம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வசந்த காலத்தில், ஏழு நாட்கள் வசந்த உற்சவமும், ஏழு நாள் கோடை உற்சவமும் நடைபெறும். நடப்பாண்டு வசந்த உற்சவம், கடந்த 6ம் தேதி துவங்கி, 11ம் தேதியுடன் நிறைவடைந்தது, அதன் பின்னர், கோடை உற்சவம், கடந்த 12ம்தேதி துவங்கியது, நேற்று முன்தினம் கோடை உற்சவம் நிறைவு தினத்தை முன்னிட்டு, சுவாமி நான்கு கால் மண்டபத்தில் எழுந்தருளி, மாடவீதிகளை வலம் வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.