பதிவு செய்த நாள்
20
ஜூன்
2013
10:06
திருக்கோவிலூர்: திருவண்ணாமலை, யோகி ராம்சுரத் குமார் ஆசிரமத்தில், மகா கும்பாபிஷேக ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று ஏகாதசருத்ர ஜபம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மகன்யாசம், ஏகாதச ருத்ரம், மகா அபிஷேகம், சோடசோபச்சார தீபாராதனை, பக்தர்கள் பஜனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, ஸ்ரீ மதி சவிதா ஸ்ரீ ராம் குழுவினரின் அபங்கம் மற்றும் பஜனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, பகவான் வெள்ளி ரதத்தில் ஊர்வலம், ஆரத்தி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, ஆசிரமத்தின் முக்கிய இடங்கள், வெட்டிவேரால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.