பதிவு செய்த நாள்
21
ஜூன்
2013
10:06
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில், ஆனி கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகாசி மாத பிரம்மோற்சவம் மற்றும் ஆனி மாதத்தில், கருட சேவை உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு, வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த மே மாதம் 22ம் தேதி துவங்கி, மூன்றாவது நாள் பிரபல கருடசேவை உற்சவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, வசந்த கால உற்சவம் மற்றும் கோடை கால உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, ஆனி கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. வரதராஜ பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதிகளை வலம் வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்தது.