Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒப்பிலியப்பன் கோவிலில் மழைவேண்டி வேதமந்திர பாராயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2013
11:06

கும்பகோணம்: ஒப்பிலியப்பன்கோவில் வேங்கடாசலபதி சுவாமி கோவிலில் மழைவேண்டி நேற்று வேதமந்திர பாராயணமும், சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக திருப்பதி, திருவிண்ணகர், பூலோக வைகுண்டம் என்றெல்லாம் போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோவில் ஸ்ரீவேங்கடாசலபதி சுவாமி கோவில் உள்ளது. இங்கு தமிழக முதல்வர் உத்தரவுப்படி மழை வேண்டி நேற்று காலை வேதமந்திர பாராயணமும், சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. முன்னதாக காலை 7.45 மணிக்கு பகவத் பிரார்த்தனை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை 8 மணி முதல் தொடர்ந்து 1 மணி நேரம் வருண சூக்த வேத மந்திர பாராயணமும், வருண காயத்ரி மந்திர பாராயணமும் திரளான பட்டாச்சார்யார்களால் நடந்தது. பின் தமிழகத்தில் மழை வேண்டி சிறப்பு ஹோமம் நடந்தது. 10 மணி முதல் 10.30 மணி வரை மழை வேண்டி பதிகங்கள் சொல்லப்பட்டது. அதன்பின் நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்யங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற மழை ராகங்களை கொண்டு வாசிக்கப்பட்டது. பின் மூலவர் வேங்கடாசலபதி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பகல் 1 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் பரணீதரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar