தென்காசி: வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி கோயிலில் நாளை(22ம்தேதி) தேரோட்டம் நடக்கிறது. வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி கோயிலில் கடந்த 14ம் தேதி ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் 9வது நாளான நாளை(22ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது.10ம் திருநாளான நாளை மறுநாள் தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.