பதிவு செய்த நாள்
21
ஜூன்
2013
11:06
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி, ஓம் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று காலை, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமம் நடந்தது. காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் கொண்டு வரப்பட்டு, பெரிய மாரியம்மன் கோவிலில் விசேஷ பூஜை செய்து, அதிர்வேட்டு முழங்க மேளதாளத்துடன் பாலிகை அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, விநாயகர் வழிபாடு, புண்யாஹனம், நாடி சந்தானம், தீபாராதனை காட்டி, பரிவாரங்கள் புடை சூழ ஐயப்பன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 9.45 மணிக்கு மேல் வேம்படிதாளம் கண்ணப்ப சிவாச்சாரியார் வேதங்கள் ஒலிக்க, ஐயப்பனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரனை காட்டப்படும். ஆட்டையாம்பட்டி ஐயப்ப பக்தர்கள் சார்பில், அன்னதானம் அளிக்கப்படுகிறது.