பதிவு செய்த நாள்
22
ஜூன்
2013
10:06
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, ஜூன், 21 முதல், "ஜேஷ்டாபிஷேகம் துவங்கியது. ஆண்டு÷தாறும், ஆனி மாதத்தில், கேட்டை நட்சத்திரத்துக்கு முந்தைய, மூன்று நாட்களில், திருமலையில், "ஜேஷ்டாபிஷேகம் உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு, ஜூன், 22, ஆனி மாத, ÷கட்டை நட்சத்திர தினம். அதையொட்டி, மூன்று நாள், "ஜேஷ்டாபிஷேகம் உற்சவம், ÷நற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாள், அபிஷேகம் முடிந்த பின், முத்துக் கவசத்திலும், மூன்றாம் நாள் கேட்டை நட்சத்திர தினமான ஜூன், 22, சிறப்பு அபிஷேகம் முடிந்த பின், மீண்டும் தங்கக் கவசத்தை அணிவித்து, மாட வீதிகளில் வலம் வரச் செய்வர். ஜேஷ்டாபிஷேக்தை முன்னிட்டு, ஜூன், 22, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் முதலிய சேவைகளும், ரத்து செய்யப்பட்டுள்ளன.