வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு நேற்று மாலை 4.00 மணிக்கு இளநீர், தேன், பால், திருமஞ்சனம், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேக பூஜை நடைபெற்றது. காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. காசிவிஸ்வநாதர் தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ஷேக்கல்முடி சிவபெருமான் கோவில், சிறுகுன்றா மகாளியம்மன் கோவில், வாழைத்தோட்டம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.