பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
காரைக்கால்: காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா, வரும் செப். 9ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவின்போது, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பூஜை நடத்தி கடலில் விசர்ஜனம் செய்வர். சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி காரைக்காலில் மும்முரமாக நடந்து வருகிறது. நிரவி மெயின் ரோட்டில் காரைக்கால் மாவட்ட இந்து அமைப்புகளின் ஒருங்கினைப்பாளர் சிவ சுப்ரமணியன், விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள் ளார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பேப்பர் மற்றும் கிழங்கு மாவு கூழ் கொண்டு விநாயகர் சிலைகள் செய்யப் படுகின்றன. மயில், அன்னம், தாமரை மலர், சிங்கம், மூஞ்சுறு, ரிஷபம் என பல வாகனங்களில் விநாயகர் அமர்ந் திருப்பது போல் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. சிலைகள் 3 அடி உயரம் முதல் 12 அடி உயரம் வரை தயாரிக்கப்படுகிறது. காரைக்காலில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் நாகப்பட்டினம், வேதாரண்யம், சீர்காழி, திருவாரூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு அனுப்பப் படுகிறது. இந்த ஆண்டு 350 விநாயகர் சிலைகள் செய்ய திட்டமிட்டுள்ளதாக சிவசுப்ரமணியன் தெரிவித்தார்.