திருப்போரூர்: கொண்டங்கி எல்லையம்மன் கோவிலில், நாளை (14ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.மேலையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டங்கி கிராமத்தில், பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பொதுமக்கள் சார்பில், திருப்பணிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான நாளை மதியம், ஊரணி பொங்கல் வைத்தலும், இரவு, அம்மன் வீதியுலாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.