பதிவு செய்த நாள்
13
ஜூலை
2013
11:07
தர்மபுரி: தர்மபுரி, ஏ.எஸ்.டி.சி., நகர் சித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நாளை (ஜூலை 14) நடக்கிறது.விழாவையொட்டி இன்று (ஜூலை 13) காலை, 11 மணிக்கு குமாரசாமிபேட்டை சக்தி விநாயகர் கோவிலிருந்து கங்கை தீர்த்த ஊர்வலமும், மாலை, 6 மணிக்கு விநாயகர் பூஜை, நவக்கிரக பூஜை, லட்சுமி பூஜை, முதல் கால யாகபூஜை, தீபாராதனை நடக்கிறது.நாளை இரண்டாம் கால யாகபூஜையும், பூர்ணாஹூதியும், 5 மணிக்கு கலச புறப்பாடும், 6 மணிக்கு சித்தி விநாயகர் மற்றும் பரிவாரி மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.