பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
10:07
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசனத்தில், நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனமாடியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுவாமி வீதியுலாகடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா, கடந்த 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் நடந்த தேரோட்டத்தில், மூலவரான நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருளி நகர வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேர் தரிசனம் முடிந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, ஆயிரங்கால் மண்டப முகப் பில் எழுந்தருளச் செய்து, சந்தனம், தேன், பால், இளநீர், விபூதி, பூ ஆகியவற்றால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. லட்சார்ச்சனை பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில், சுவாமிகள் எழுந்தருள செய்து திருவாபரண அலங்கார காட்சி, லட்சார்ச்சனைகள் நடந்தன. பகல் 1:00 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு முடிந்து, 2:20 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாத்தியங்கள் முழங்க, சுவாமிகளின் திருநடன காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். சிதம்பரம் டி.எஸ்.பி., ராஜராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.