பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
காரிமங்கலம்: காரிமங்கலம் அபிதகுஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் சனி மஹாபிரதோஷத்தையொட்டி, நாளை மாலை, 4 மணிக்கு கணபதி ஹோமமும், 4.30 மணிக்கு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். *காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வர மடம் வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் நாளை மாலை, 4 மணிக்கு கணபதி ஹோமமும், 4.30 மணிக்கு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.
* தர்மபுரி, கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில்களிலும் பூஜைகள் நடக்கிறது.