Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பீமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கன்னியம்மன் கோவிலில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெய்க்காரப்பட்டி முனியப்பன் பண்டிகை எருது பூஜையுடன் அமைதியாக நடந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2013
10:07

சேலம்: சேலம் நெய்க்காரப்பட்டி மூங்கில்கொத்து முனியப்பன் கோவில் பண்டிகை, எருது பூஜையுடன் அமைதியாக நடந்து முடிந்தது. சேலம், கொண்டலாம்பட்டி அருகில் உள்ள நெய்க்காரப்பட்டியில் மூங்கில்கொத்து முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், ஆடிமாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமையில் பண்டிகையும், எருதாட்டமும் நடைபெறும். இங்கு நடைபெறும் எருதாட்டத்துக்காக, ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, இப்பகுதி சுற்றுப்புற கிராம மக்கள், பல்வேறு இடங்களுக்கு சென்று, எருதுகளை அழைத்து வருவதும் வழக்கம். நூற்றுக்கும் மேற்பட்ட எருதுகளை கொண்டு நடத்தப்படும், இந்த எருதாட்டத்துக்கு கடந்த ஆண்டு, வருவாய்துறையினர் தடை விதித்தனர். கடைசி நேரத்தில் அறிவித்த தடையால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வன்முறையில் இறங்கினர். இதனால் பெரும் பதட்டம் நிலவியது. இந்நிலையில், நடப்பாண்டு எருதாட்டத்துக்கு அனுமதி வழங்கும்படி, கடந்த மாதமே கலெக்டர் மகரபூஷணத்துக்கு மனு அளித்தனர். அனுமதி மறுக்கப்பட்டதால், நீதிமன்றம் மூலம் அனுமதி கோரப்பட்டது. இதற்கிடையில், கிராம பிரதிநிதிகளை அழைத்து, போலீஸார் அமைதிப்பேச்சுவார்த்தையும் நடத்தினர். இந்நிலையில் நீதிமன்றம், ஒரு எருதை வைத்து, எருது பூஜை நடத்தி, பண்டிகை கொண்டாட அனுமதி வழங்கியது. நேற்று முன்தினம் இளம்பிள்ளை அருகில் உள்ள இடங்கணசாலை கிராமத்தில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி, எருது பூஜைக்கான எருதை தேர்வு செய்து அழைத்து வந்தனர். கடந்த ஆண்டு நடந்த கலவரத்தை கருத்தில் கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். விழாக்குழு தலைவர் ஏழுமலை தலைமையிலான கிராம மக்கள், எருது பூஜை நடத்தி, கோவிலை சுற்றி அழைத்து வந்தனர். கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, ஏராளமானோர் பண்டிகையில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar