பதிவு செய்த நாள்
26
ஜூலை
2013
10:07
ஆத்தூர்: சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பாரத திருமுருகன் திருச்சபை சார்பில் நடந்த 108 திருவிளக்கு பூஜையை மாநிலத்தலைவர் மோகனசுந்தரம் துவக்கி வைத்தார். வட்டார ஆலோசகர் அம்மமுத்து முன்னிலை வகித்தார். திருவிளக்கு பூஜையை ஒட்டி கைலாசநாதர், சௌந்தர்யநாயகி, நந்திபெருமான், சொக்கநாதர், மீனாட்சிஅம்பாள், சைவகுரவர்கள், 63 நாயன்மார்கள், அகத்தியர், சப்தகன்னியர், பாலசுப்பிரமணியர் ஆகியோருக்கு சிறப்பு அபஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பின்னர் அன்னதானம் நடந்தது. பக்தர்களுக்கு காயத்ரி மந்திரம், ஆன்மீக வெளிப்பாடு இலவச புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆலோசகர் சீனிவாசகம், செயலாளர் சண்முகநாதன், ஜெயகனி அம்மாள், சேர்ந்தபூமங்கலம் அமைப்பாளர் சண்முகசுந்தரி, திருச்செந்தூர் அமைப்பாளர் மணி மற்றும் நிர்வாகிகள் பரமசிவன், நாராயணன், முருகன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.