உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆடி கிருத்திகை பெருவிழா நடக்கிறது. விழாவையொட்டி காலை 8:30 மணிக்கு வேடுசெட்டி குளக்கரையில் இருந்து தேரோடும் வீதி வழியாக காவடி, தேர் செடல், 1008 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை சென்றடைகின்றனர். நிகழ்ச்சிக்கு குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை தாங்குகிறார். ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரம தலைமை சுவாமிஜி அனந்தானந்தஜி மகாராஜ் அருளாசி வழங்குகிறார். பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர் பங்கேற்கின்றார்.