ரம்ஜான் எனப்படும் "பெருநாள் நமக்கெல்லாம் நன்னாள். "இதை விட பெருமைக்குரிய நாள் இல்லை என்பதால் தான், "பெருநாள் எனப்பட்டது. இந்த நல்வேளையில் அண்ணல் நபிகள் நாயகம் நமக்களித்த அறிவுரைகளைக் கேட்போம். * ரமலான் பிறை பார்த்து நோன்பை வையுங்கள். (ஷவ்வால்) பிறை பார்த்து நோன்பை நிறுத்துங்கள். வானம் மேகத்தால் மறைக்கப்படுமானால், எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள். * நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில் எவர் விழித்திருந்து (இறைவனை) வணக்கம் புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளில் (இறுதிநாட்களில்) விழிப்புடன் இருக்கும். * மக்கள் ஈத்பெருநாள் தொழுகைக்கு முன்னரே பித்ரா எனப்படும் தர்மத்தை கொடுத்து விட வேண்டும். * ஒரு அடியானின் நோன்பு பித்ரா தர்மம் செலுத்தாத வரை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும். பித்ரா (தர்மம்) கொடுத்த பின்பு தான் நோன்பு வானகம் செல்லும். சரி...தர்மத்தைப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும். ""உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு "துஆ செய்யுங்கள். அதுவே, உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும், என்கிறார்கள் நாயகம்(ஸல்) அவர்கள். இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31