செஞ்சி:வடவெட்டி கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவி லில் நேற்று முன்தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு இசை நிகழ்ச்சியும், வாண வேடிக்கையும் நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். இதில் தர்மகர்த்தா புண்ணியமூர்த்தி, மற்றும் நிர்வாக குழுவினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.