பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை, மேலூர் பகுதியில் எட்டி பார்க்கவில்லை. கடந்த ஆண்டும் சரியாக மழை பெய்யாததால், இப்பகுதியில் விவசாயம் பாதித்தது. இதனால், கீழையூர் பகுதியில், பங்குனி திருவிழாநடக்க வில்லை. இந்த ஆண்டு மழை பெய்ய வேண்டி, ஆக, 9 காலை கீழையூர், மேலப்பட்டி, ரங்கசாமிபுரம், பட்டிஅடைக்கன்பட்டி, நா.கோவில்பட்டி, காந்தி நகர் மக்கள் சேர்ந்து, கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தினர். பொங்கல் வைத்து வழிபட்டனர்.