Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் உண்டியலில் ரூ.1.38 கோடி ... புதுச்சேரி லஷ்மி ஹயக்ரீவர் கோவில்பிரம்மோற்சவம் துவக்கம் புதுச்சேரி லஷ்மி ஹயக்ரீவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசியில் உருவாகும் 31 அடி உயர "மெகா விநாயகர் சிலை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஆக
2013
10:08

அவிநாசி: அவிநாசி அருகே, திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு சிற்ப தொழிற்கூடத்தில், 75 டன் எடை, 31 அடி உயரத்தில், "மெகா விநாயகர் சிலை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே, திருமுருகன்பூண்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட சிற்ப தொழிற்கூடங்கள் உள்ளன. இங்கு தயாராகும் சிற்பங்கள், தமிழகம், பிற மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இங்குள்ள சிற்ப தொழிற்கூடம் ஒன்றில் உருவாக்கப்படும் பெரிய அளவிலான விநாயகர் சிலை, திண்டுக்கல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக, ஊத்துக்குளி அருகே, வெள்ளியம்பாளையத்தில் இருந்து, 130 டன் எடையுள்ள பெரிய பாறாங்கல், பூண்டி அருகே பச்சாம்பாளையத்துக்கு, கடந்தாண்டு, ஜூலை மாதம் கொண்டு வரப்பட்டது. 12 சிற்பிகள், ஓராண்டாக விநாயகர் சிலையை உருவாக்கி உள்ளனர். "மெகா விநாயகர் சிலை, திண்டுக்கல் கோபாலசமுத்திரத்தில் உள்ள, 108 விநாயகர் சிலைகளுடன் அமைந்த ராஜ கணபதி கோவிலில், அடுத்த மாதம், 8ம் தேதி, பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சிலையை உருவாக்கிய சிற்பிகள் கூறியதாவது: சங்கடஹர சதுர்த்தி விநாயகர் என, பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை, உப பீடத்துடன் சேர்த்து, 31 அடி உயரம், 15 அடி அகலம், 10 அடி கனம் கொண்டது. 130 டன் எடையுள்ள கல் கொண்டு வரப்பட்டு, தேவையற்ற பகுதிகள் நீக்கப்பட்ட பின், இப்போது, 75 டன் எடையுள்ளது. தந்தகம், மோதகம், அங்குசம், பாசம் என, நான்கு கைகளுடன், அமர்ந்த கோலத்தில், வலம்புரியாக, சிலை உருவாக்கப்பட்டு உள்ளது. சிலை உருவாக்கும் பணியை, இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar