திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரருக்கு குருபூஜை நடந்தது. நால்வர்களில் ஒருவரான சுந்தரருக்கு குருபூஜையை முன்னிட்டு, கோயிலில் சண்முகர் சன்னதியில் எழுந்தருளியுள்ள அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் கற்சிலைகளுக்கும், உற்வர் சுந்தரருக்கும் பல்வகை அபிஷேகம் நடந்தது. உற்வர் அலங்காரங்களுடன் கம்பத்தடி மண்டபத்தை மூன்றுமுறை வலம் சென்று, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் எழுந்தருளினார்