பதிவு செய்த நாள்
16
ஆக
2013
10:08
இடைப்பாடி: இடைப்பாடி பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். இடைப்பாடியில் உள்ள மேட்டுத்தெரு, க.புதூர், ஆலச்சம்பாளையம், வெள்ளாண்டிவலசு பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில்களில், திருவிழா, கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. மேட்டுத்தெரு மாரியம்மன், க.புதூர் காளியம்மன் ஸ்வாமிகளின் திருக்கல்யாணம், புதன்கிழமை நள்ளிரவு நடந்தது. அதையடுத்து, நேற்று காலை நடந்த தீமிதி விழாவில், மேட்டுத்தெரு மாரியம்மன் கோவிலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், க.புதூர் காளியம்மன் கோவிலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், ஆகாய விமான அலகு, ஆம்னி வேன் போன்றவைகளை இழுத்து வந்தும், பக்தர்கள் தீ மிதித்தனர். ஏராளமான பெண்கள், தங்களது குழந்தைகளுடனும் தீ மிதித்தனர்.