சுப்பிரமணியபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று கொடை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2013 10:08
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோவிலில் இன்று கொடை விழா நடக்கிறது. விழாவினை முன்னிட்டு கடந்த 13ம் தேதி காலை கொடைவிழாவிற்கான கால்நாட்டு விழா நடந்தது. கொடை விழாவில் நேற்று (19ம் தேதி) இரவு வில்லிசையும் தொடர்ந்து 12 மணிக்கு அம்பாளுக்கு சந்தனகாப்பு குடி அழைப்பு தீபாராதனையும் 12.30 மணிக்கு அம்மன் கும்பம் எடுத்து வீதி வலம் வருதலும் நடந்தது. இன்று (20ம் தேதி) காலை 9 மணிக்கு அம்மனுக்கு பால்குடம் எடுத்து ரதவீ தி வலம் வருதலும், காலை 10.00 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் அம்மன் கும்பம் எடுத்து வீதிவலம் வருதலும் நடக்கிறது. மாலை மஞ்சள் நீராட்டும் இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது, தொடர்ந்து 9 மணிக்கு முளைப்பாரி எடுத்து ரதவீதி வலம் வந்து கோவில் சேர்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனை நடக்கிறது. 21ம் தேதி அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனையும் அம்மன் வீதிஉலா, மஞ்சள் நீராட்டும் மாலை 5 மணிக்கு முளைப்பாரி எடுத்து கடலில் பிரி செலுத்துதலும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சிறுமிகளின் கும்மி கோலாட்டமும், வில்லிசை, நையாண்டி மேளம், வாணவேடிக்கை, மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாக கமிட்டி தலைவர் முருகன், செயலர் செந்தில்குமார், பொருளாளர் ஜெகன், துணைத் தலைவர் செந்தில்வேல், துணைச்செயலாளர் செந்தில் குமார், கணக்காளர் சந்தனக்குமார், கொடைவிழா கமிட்டியினர் சுரேஷ்பாபு, செந்தில்குமார் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.