Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் வருஷாபிஷேகம் கோவில்பட்டி கோயிலில் வரலட்சுமி விரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூட்டாம்புளி ஸ்ரீ சந்தன முத்துமாரி அம்மன் கோவில் கொடை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2013
10:08

சாயர்புரம் : புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளியில் ஸ்ரீ சந்தன முத்துமாரி அம்மன் கோவில் கொடை விழா வரும் 27ம் தேதி நடக்கிறது. கொடை விழாவை முன்னிட்டு கடந்த 20ம் தேதி கால்நட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று(24ம் தேதி )இரவு 7மணிக்கு திருவிளக்கு பூஜை வழிபாடும், இரவு 9மணிக்கு ஸ்ரீ சந்தனமுத்துமாரி அம்மன் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி களும் நடக்கிறது. ஆக, 25 இரவு 9 மணிக்கு கவிதாலயாவின் அய்யாவின் இன்னிசை கச்சேரி நடக்கிறது. 26ம் தேதி இரவு 9 மணிக்கு அம்மன் பக்தி பாடல் கச்சேரியும், அதை தொடர்ந்து இரவு 11 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. கொடை நாளான 27ம் தேதி காலை அன்னதானம் நடக்கிறது. அதை தொடர்ந்து அம்மனுக்கு தீர்த்த நீராடி ஊர்வலம் வருதல், பால் குடம் எடுத்தல், யானை பவனி வருதல் ஆகியவை நடக்கிறது. மதியம் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அதை தொடர்ந்து பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்றிரவு 9 மணிக்கு சிருங்காரி மேளம், வாடிப்பட்டி மேளம், நையாண்டி மேளத்துடன் கரகாட்டம் மற்றும் ஸ்ரீ சந்தனமுத்துமாரி அம்மன் கலைக் குழுவினரின் சிலம்பாட்டம், களியலாட்டம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து நள்ளிரவு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல், அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல், அம்மனுக்கு சிறப்பு பூஜை, உற்சவ அம்மன் பூஜை, வாண வேடிக்கையுடன் ராஜ மேளம் முழங்க, யானை முன்செல்ல, அம்மன் சப்பர பவனி வருதல் ஆகியவை நடக்கிறது. 28ம் தேதி மதியம் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், அம்மன் மஞ்சள் நீராடுதல், அம்மனுக்கு மதிய பூஜை, முளைப்பாரி பெண்கள் கும்மி கொட்டி அம்மன் வாழ்த்து பாடுதல் ஆகிய நிகழ்சிகள் நடக்கிறது. மதியம் 3மணிக்கு வரிப்பழம் பகிர்தல் நடக்கிறது. அன்றிரவு இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி செந்தூர்பாண்டி, கோவில் நிர்வாகிகள் சேகர், குணபாலன், ஐயங்கோபால், தங்கலிங்கம், மற்றும் நிர்வாக கமிட்டியினர், வரிதாரர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், கார்த்திகை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது. திருமலை ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே சிலுக்குவார்பட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா பல்வேறு காரணங்களால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
லண்டன்; தீபாவளி மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, லண்டனின் நீஸ்டனில் உள்ள பிஏபிஎஸ் ... மேலும்
 
temple news
ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar