பதிவு செய்த நாள்
26
ஆக
2013
10:08
நாகமலை: மதுரை கீழக்குயில்குடி சமணர் மலையின் சிறப்புகளை விளக்கும் பொருட்டு, பசுமை நடை அமைப்பு சார்பில், "விருட்சத்திருவிழா நடந்தது. சமணர் படுக்கை அமைந்துள்ள "செட்டிப்புடவு பகுதியில், சமணர் வரலாறு குறித்து, தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம், பேராசிரியர்கள் சுந்தர்காளி, கண்ணன் விளக்கினர். தொடர்ந்து குழந்தைகளுக்கான முகாம் நடந்தது. களிமண் சிற்பங்கள் வடிவமைப்பு, காகிதத்தில் கலை பொருட்கள் செய்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. கலாச்சார விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், பல்லாங்குழி, கில்லி போட்டிகள் நடந்தன. மாணவர்களுக்கு கில்லி, பம்பரம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பின், மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் எதிர்ப்பு, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம், மதுரை எஸ்.பி., பாலகிருஷ்ணன், கீழக்குயில்குடி ஊராட்சி தலைவர் தங்கராஜ், பேராசிரியர்கள் முத்தையா, ஷாஜகான், சீனிவாசன் உட்பட பலர் பேசினர். அனைவருக்கும் இயற்கை உணவு வழங்கப்பட்டது.