பதிவு செய்த நாள்
26
ஆக
2013
10:08
கீழக்கரை: கீழக்கரை அருகே கொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று முன்தினம் காப்புக்கட்டுடன் துவங்கியது. ஆக., 28ல் காலை 7 மணிக்கு கிராம தேவதைகள் வழிபாட்டை தொடர்ந்து,பிள்ளையார் கோயிலில் இருந்து 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடைபெறும்.8 மணிக்கு ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் சமுதாய கொடி ஏற்றிய பின்பு விளையாட்டு போட்டிகள், இரவு லெபனான், சிங்கப்பூர், குவைத் வாழ் கொம்பூதி நண்பர்கள் வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 11.00 மணிக்கு சந்தன காப்பு நள்ளிரவு 12 மணிக்கு கண்ணபிரான் பிறந்த நாள்,விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. 29ல் மஞ்சள் நீராட்டுவிழா ,கயிறு இழுக்கும் போட்டி,வழுக்கு மரம் ஏறுதல்,கண்ணபிரான் அழைப்பு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சென்னை வெங்கடேஸ்வரி அறக்கட்டளை நிறுவனர் ஏ.எம்,செல்வராஜ் ஆலோசனையின் பேரில்,விழா கமிட்டியாளர்கள் ,யாதவர் சங்கம்,இளைஞர் சங்கம், மகளிர் மன்றத்தினர் இணைந்து செய்கின்றனர்.