பதிவு செய்த நாள்
26
ஆக
2013
10:08
சென்னை: சென்னை ராஜாஜி சாலை அருகில் உள்ள பூங்காவில், குழந்தைகள் சிலர், ஆடி மாத திருவிழாவை கொண்டாடினர். சென்னை, ராஜாஜி சாலை அருகில் உள்ள சத்யா நகர் பூங்காவில் நேற்று காலை 10 முதல் 15 குழந்தைகள் வரை ஒன்று கூடினர். கரகம் ஒன்றை தயார் செய்து, அதன் உச்சியில், விநாயகர் சிலையை வைத்து அலங்கரித்தனர். அதை ஒரு சிறுவன் தலையில் தூக்கி வைத்து கொண்டான். ஒரு சிறுவன், பெயின்ட், டின் னை மேளமாக மாற்றினான். மற்ற சிறுவர்கள் உடனடியாக பக்தர்களானார்கள். ஊர்வலத்தின் முன்னணியில், அலகு குத்தி தேரிழுப்பதை நினைவுபடுத்தும் விதத்தில், ஒரு சிறுவன் தனது இடுப்பில் கயிற்றை கட்டி, அதன் மறுமுனையை ஒரு சைக்கிளில் கட்டி கொண்டான். சைக்கிளில் மற்றொரு சிறுவன் ஏறி அமர்ந்து ஓட்ட, கயிற்றை கட்டி கொண்ட சிறுவன், தான் அலகு குத்தி தேரிழுப்பதாக பாவனை செய்தான். விளையாட்டின் இறுதியில், தீமிதியும் நடந்தது. அது உண்மையான தீமிதியாகவும் இருந்தது. சூடான அடுப்புக் கரிகளை கொட்டி பரப்பி, அதன் மீது சிறுவர்கள் தீ மிதித்து, தங்கள் பிரார்த்தனை விளையாட்டை நிறைவு செய்தனர்.